ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் |
இந்துக்கள் தெய்வமாக வழிபடும் ஆண்டாள் குறித்து வைரமுத்து பேசிய சர்ச்சைக்குரிய கருத்தால் தமிழ்நாட்டில் இந்து அமைப்பினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். நேற்று பெசன்ட் நகரில் உள்ள வைரமுத்துவின் வீட்டை இந்து மகாசபை அமைப்பினர், இந்து மக்கள் கட்சியினர், அனுமன் சேனா அமைப்பினர் முற்றுகையிட்டனர். வைரமுத்து வீட்டின் முன் நின்று அவருக்கு எதிரான கோஷங்களை எழுப்பினார்கள். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோஷமிட்டார்கள்.
விரைந்து வந்த போலீசார் அவர்கள் அனைவரையும் அப்புறப்படுத்தினார்கள். 100 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இதேபோன்று நேற்று சென்னை நகரில் பல இடங்களில் வைரமுத்துக்கு எதிரான ஆர்ப்பட்டாங்களும், போராட்டங்களும் நடந்தது.
விஜயகாந்த்
இந்த நிலையில் ஆண்டாள் சர்ச்சை தொடர்பாக நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் வைரமுத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று அவர் மனைவி பிரேமலதாவுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சென்று வழிபட்டார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறும்போது: எனது தாயின் பெயர் ஆண்டாள். அவர் குறித்து வைரமுத்து வெளியிட்ட கருத்துக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். என்றாலும் அவர் மன்னிப்பு கேட்டிருக்கிறார். மன்னிப்பது தான் மனித மாண்பு. இது தொடர்பாக ஜீயர் சுவாமிகள் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவளிப்போம் என்றார்.