ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என்ற பல வருடங்களாக சொல்லிக் கொண்டிருந்தார். இப்போது வருவது உறுதி வருகிற சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவேன் என்றும் அறிவித்து விட்டார். சில நாட்களுக்கு முன்பு 6 மாதத்திற்குள் சட்டசபை தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார் என்று கூறினார்.
இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட நிர்வாகிகள் நியமனம் தொடங்கியிருக்கிறது. இந்த பணி வேலூர் மாவட்டத்தில் ஆரம்பமாகியிருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூர் மாவட்ட நிர்வாகிகளின் கூட்டம் நடந்தது. இதில் மாவட்டத்தை சேர்ந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ரஜினி மக்கள் மன்ற பொறுப்பாளர் சுதாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வேலூரில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டபடி மாவட்ட பொறுப்பாளர்களுக்கான நியமனத்துக்கு ரஜினிகாந்த் ஒப்புதல் அளித்திருக்கிறார். அதன்படி மாவட்ட செயலாளராக சோளிங்கர் ரவியும், இணை செயலாளராக ஆர்.நீதியும், துணை செயலாளர்களாள வாணியம்பாடி கணபதி, பொய்கை ராஜன் பாபு, முகமது கலிபா ஆகியோரும், மகளிர் அணி செயலாளராக சங்கீதாவும், இளைஞர் அணி செயலாளராக பி.அருணும் நியமிக்கப்படுகிறார்கள்.
கிளை மற்றும் வார்டு மன்றங்கள், ஊராட்சி மன்றங்கள் பேரூராட்சி மன்றங்கள், நகராட்சி, மாநகராட்சி மன்றங்களுக்கான தேர்தல் ஜனநாயகமுறைப்படி நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதுவரை தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது