ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
உதிரிபூக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே, நண்டு, ஜானி, முள்ளும் மலரும் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் மகேந்திரன். சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த மகேந்திரன் தெறி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு பல படங்களில் நடித்து வருகிறார்.
கரு.பழனியப்பன் இயக்கும் புகழேந்தி என்ற படத்தில் அருள்நிதியின் தந்தையாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் புதுக்கோட்டை பகுதியில் நடந்து வருகிறது. நேற்று இதன் படப்பிடிப்பு புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் (பழைய அரண்மணை) நடந்தது.
இதில் மகேந்திரனும், அருள்நிதியும் கலந்து கொண்டு நடித்தனர். அப்போது திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறிய மகேந்திரன் மயங்கி விழுந்தார். அவருக்கு மூச்சுத் திணறலும் ஏற்பட்டது.
அதிர்ச்சி அடைந்த படக்குழுவினர் அவரை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது மூச்சு திணறல் சரிசெய்யப்பட்டது. என்றாலும் அவருக்கு இதயத்தில் பிரச்சினை இருக்கிறது. அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். நேற்று மாலை சகஜ நிலைக்கு திரும்பிய மகேந்திரன். மீண்டும் படப்பிடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள் வந்து நடிக்கிறேன் என்று இயக்குனர் கரு.பழனியப்பனிடம் கூறியுள்ளார்.
இதுகுறித்து கரு.பழனியப்பன் தனது டுவிட்டரில் எழுதியிருப்பதாவது: 40 ஆண்டுகளுக்கு முன் தமிழ் சினிமாவின் மூச்சுத்திணறலை சீரடைய வைத்த இயக்குனர் மகேந்திரனுக்கு இன்று ஏற்பட்ட மூச்சு திணறல் சீரடைந்து நலமுடன் உள்ளார். சந்திக்க சென்ற என்னிடம் "நாளைக்கே ஷூட்டிங் வையுங்க வந்துவிடுறேன்" என்று சொல்லி சிரித்தார். வாழ்க நீ எம்மான். என்று குறிப்பிட்டிருக்கிறார். இன்று அல்லது நாளை மகேந்திரன் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்ற தயாரிப்பு வட்டாரங்கள் தெரிவிக்கிறது.