பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு |
இசை அமைப்பாளர் இளையராஜா நேற்று திருப்பதி சென்றார். அங்கு அவர் சாமி தரிசனம் செய்தார். அவரை வரவேற்ற தேவஸ்தான அதிகாரிகள் அவருக்கு சிறப்பு தரிசன ஏற்பாடுகள் செய்து கொடுத்தனர். தீர்த்தம் மற்றும் பிரசாதங்கள் வழங்கினார்கள்.
திருப்பதிக்கு இளையராஜா வந்திருப்பதை அறிந்த பத்திரிக்கையாளர்கள் அவரை பேட்டிகாண காத்திருந்தனர். தரிசனம் முடித்து திரும்பிய இளையராஜாவிடம் ரஜினி, கமலின் அரசியல் பிரவேசம், வைரமுத்துவின் ஆண்டாள் பிரச்சினை. எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு இளையராஜா பாடலை பாட விதித்த தடை உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்பினார். ஆனால் இளையராஜா எந்த கேள்விக்கும் பதிலளிக்காமல் பத்திரிக்கையாளர்களை புறக்கணித்து விட்டுச் சென்றார். இதனால் பத்திரிகையாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். வழக்கமாக திருப்பதி வரும் இளையராஜா ஆன்மீகம் தொடர்பான விஷயங்களையாவது நிருபர்களுடன் பேசுவார். இந்த முறை எதுவும் பேசாமல் கோபத்துடன் சென்றது பத்திரிகளையாளர்களை ஆச்சர்யப்பட வைத்தது.