ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் அமிதாப் பச்சன், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை தொடர்ந்து பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோனுக்கு டில்லி மியூசியத்தில் மெழுகு சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. டில்லியின் புகழ்பெற்ற மதாமி துசத்ஸ் மியூசியத்தில் சன்னி லியோனின் மெழுகு சிலை நிறுவப்பட்டுள்ளது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.
இது பற்றி சன்னி லியோன் கூறுகையில், மதாமி துசத்ஸ் மியூசியத்தில் எனது உருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது ஆச்சரியமாகவும், சந்தோஷமாகவும் உள்ளது. எனது மெழுகு சிலை அனைவரையும் கவர்வதாக உள்ளது. நான் அமர்ந்திருப்பது போன்ற உருவம் அமைக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். இந்த மறக்க முடியாத, அற்புதமான அனுபவத்தை தந்த ஒட்டு மொத்த அணிக்கும் என் நன்றி.
எனக்கு இணையாக கவரும் வகையில் சிலை அமைக்கப்பட்டுள்ளது சந்தோஷமாக உள்ளது. எனது ரசிகர்கள் இதை பார்த்து எப்படி உணர்ச்சியை வெளிப்படுத்துவார்கள் என பார்க்க ஆர்வமாக உள்ளது. இந்த சிலை இந்த ஆண்டு இறுதியிலேயே காட்சிபடுத்தப்பட உள்ளதால் அதுவரை என்னால் காத்திருக்க முடியவில்லை. நம்ப முடியாத இந்த கவுரவத்திற்காக மதாமி துசல்ஸ் என்னை தேர்வு செய்தது மிகுந்த ஆச்சரியமாக உள்ளது என்றார்.