பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர். தமிழில் பொம்மலாட்டம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் ரஜினி நடிக்கும் காலா படத்தில் நடித்துள்ளார். ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து அவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். ரஜினி மிகவும் எளிமையான மனிதர் அவருக்கு அரசியல் சரிப்பட்டு வராது என்று கூறியுள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது:
இந்திய அரசியல் சாக்கடை போன்றது. அதில் நல்லவர்கள் இறங்க முடியாது. அப்படி இறங்கியவர்களால் ஜெயிக்க முடியாது. ரஜினி மிக எளிமையான மனிதர். அவருக்கு அரசியல் சரிப்பட்டு வராது. இதை நான் அவரிடத்தில் நேரடியாகவே கூறியிருக்கிறேன். அரசியலில் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் எதிராக மக்கள் போராடுவார்கள். அப்போது சினிமா மூலம் கிடைத்த புகழ் அனைத்தையும் இழக்க வேண்டியது இருக்கும். ரஜினி அரசியலுக்கு செல்வது குறித்து இன்னும் தீவிரமாக யோசித்து முடிவெடுக்க வேண்டும் என்கிறார் நானா படேகர்.