இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடித்த ஜெய்சிம்ஹா படத்தை அடுத்து தேஜா இயக்கத்தில் தனது தந்தை என்டிஆரின் வாழ்க்கை வரலாறு கதையில் நடிக்க தயாராகிக்கொண்டிருக்கிறார் பாலகிருஷ்ணா. இந்தநிலையில், நேற்று முன்தினம் தனது தந்தை என்டிஆரின் நினைவு நாளையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்திய பிறகு ஊடகங்களை சந்தித்தார்.
அப்போது பாலகிருஷ்ணா கூறுகையில், எனது தந்தை என்டிஆர் புகழ் பெற்ற நடிகர் மட்டுமின்றி, ஆந்திராவின் முதலமைச்சராக இருந்தவர். அவருக்கு இந்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா விருது இதுவரை வழங்கப்படவில்லை. பல அரசுகள் மாறியபோதும் என்டிஆருக்கு பாரத ரத்னா விருது கிடைக்கவில்லை. அதனால், என்டிஆருக்கு பாரத ரத்னா விருது கொடுக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பேன். அதற்காக போராடுவேன் என்று பாலகிருஷ்ணா கூறியுள்ளார்.