டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஜெயக்குமார் இயக்கத்தில் கெளதம் கார்த்திக் - நிக்கி கல்ராணி நடித்த படம் ஹர ஹர மகாதேவகி. அடல்ட் கதையில் உருவான இந்த படம் வெற்றி பெற்றதை அடுத்து, தற்போது மீண்டும் சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கி வரும் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து வருகிறார் கெளதம் கார்த்திக். ஆனால் முந்தைய படத்தில் நடித்த நிக்கி கல்ராணிக்குப் பதிலாக வைபவி சாண்டில்யா இந்த படத்தில் நடிக்கிறார். இந்த படமும் அடல்ட் கதையில் தான் தயாராகி வருகிறது.
இந்த படத்தை இயக்கும் சந்தோஷ் ஜெயக்குமார் ஆர்யா நடிக்கும் கஜினிகாந்த் படத்தையும் சேர்த்து இயக்கிக் கொண்டிருக்கிறார். அதோடு, ஒருநாள் திடீரென்று ஆர்யாவை இருட்டு அறையில் முரட்டு குத்து படப்பிடிப்பு தளத்துக்கு அழைத்து சென்ற அவர், ஒரு பாடலில் கெளதம் கார்த்திக்குடன் இணைந்து நடனமாட வைத்து விட்டாராம்.
இந்த தகவலை கஜினிகாந்த் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கூறிய ஆர்யா, இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நான் ஒரு பாடலில் நடிப்பேன் என்று நினைத்தே பார்க்கவில்லை. என்னைப்போலவே டைரக்டர் சந்தோசுக்கும் அந்த எண்ணமே இல்லை. திடீரென்று எடுத்த முடிவுதான் இது. அந்த வகையில், கெளதம் கார்த்திக்குடன் இணைந்து நடனமாடியது ஒரு புதிய அனுபவமாக அமைந்தது என்கிறார் ஆர்யா.