டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், பாலகிருஷ்ணா நடித்து கடந்த சங்கராந்திக்கு வெளியான படம் ஜெய்சிம்ஹா. இந்த படத்தை அடுத்து தனது தந்தையும், பிரபல தெலுங்கு நடிகருமான என்டிஆரின் வாழ்க்கை வரலாறு கதையில் நடிக்கிறார். மார்ச் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கும் இந்த படத்தை தேஜா இயக்குகிறார். இப்படத்தில் என்டிஆர் வேடத்தில் நடிக்கிறார் பாலகிருஷ்ணா.
இன்னும் சிலரது வாழ்க்கை வரலாறு கதைகளிலும் நடிக்க வேண்டும் என்பது பாலகிருஷ்ணாவின் விருப்பமாக இருந்து வருகிறதாம். அந்த வகையில், 2020-ல் தனது 60வது வயதை அடையும் அவர், அப்போது ராமானுஜாச்சாரியாவாக நடிக்க உள்ளார். இதன்பிறகு ஸ்ரீ கிருஷ்ணா தேவராயா உள்ளிட்ட சிலரின் வாழ்க்கை கதையிலும் நடிக்க விருப்பம் தெரிவித்திருக்கிறார்.
இதில் ராமானுஜாச்சாரியா திரைப்படத்தை தனது 60வது பிறந்தநாளில் தொடங்க இப்போதே திட்டமிட்டு வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார் பாலகிருஷ்ணா.