ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர் சூர்யாவைப் பற்றி இசை சேனல் ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவரைப் பற்றித் தரக்குறைவான கமெண்ட் அடிக்கப்பட்ட விவகாரம் இன்று சூர்யா ரசிகர்களின் போராட்டம் வரை சென்றுள்ளது. ரசிகர்கள் எந்த விதமான போராட்டத்திலும் ஈடுபட வேண்டாம், பயனுள்ள செயல்களுக்கு, சக்தியையும், நேரத்தையும் செலவிடுங்கள் என சூர்யா டுவிட்டரில் கேட்டுக் கொண்டார்.
அந்த டுவிட்டர் பதிவிலேயே மற்ற முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் கமெண்ட்டுப் பகுதிகளில் தரக் குறைவான கமெண்டுகளைப் போட ஆரம்பித்துள்ளார்கள். 'டிரோல்' செய்வது என்பது தற்போது அதிகமாகிவிட்டது. அதை பலரும் ஜாலியான ஒரு விஷயமாக எடுத்துக் கொண்டு மீம்ஸ், வீடியோ என கிண்டலடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அந்த கிண்டல் ஒரு எல்லைக்குள் இருந்தால் பரவாயில்லை, ஆனால், பல நேரங்களில் எல்லை மீறி நடப்பதுதான் பிரச்சனைகளை விதைக்க ஆரம்பிக்கிறது.
பல முன்னணி ஹீரோக்கள் அவர்களுடைய ரசிகர்களுக்கு இது போன்ற விஷயங்களைச் செய்யக் கூடாது என முதலில் கற்றுத் தர வேண்டும். சமூக வலைத்தளங்களில் நடந்து கொண்டிருக்கும் இந்த 'டிரோல்' இப்போது சேனல்கள் வரை சென்றுள்ளது தேவையற்றது.