Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

என் வார்த்தையை திரித்து பரப்பிவிட்டார்கள் : வைரமுத்து

20 ஜன, 2018 - 13:11 IST
எழுத்தின் அளவு:
Aandal-issue-:-Vairamuthu-explanation

ஆண்டாள் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பாடலாசிரியர் வைரமுத்துவிற்கு தமிழகம் முழுக்க கடும் கண்டனங்கள் எழுந்தன. தொடர்ந்து அவருக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறதுன, பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல இடங்களில் வைரமுத்து மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்பிரச்னை தொடர்பாக வைரமுத்து தன் தரப்பு விளக்கத்தை அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது...

கடந்த 10 நாட்களாக மூர்ச்சையுற்று கிடக்கிறேன். ஆண்டாள் புகழ் பாட நான் ஆசைப்பட்டது தவறா. ஆண்டாள் குறித்த ஆராய்ச்சி கட்டுரைகளை 3 மாதங்கள் ஆராய்ச்சி செய்தேன். தமிழுக்கு தடம் சமைத்தவர்களை இளம் தலைமுறையினர் புரிந்து கொள்ளவே எழுதினேன். சமய, சமூகவியல் பார்வை உடையவள் ஆண்டாள். தமிழ் வெளியில் எழுத முதல் பெண் விடுதலை குரல் ஆண்டாள் உடையது.

ஆண்டாளை பற்றி பாட பாட பக்தி இல்லாத எனக்கு சக்தி பிறக்கிறது, தமிழ் பிறக்கிறது. ஆண்டாள் பற்றி நான் பேசியது என் கருத்து இல்லை. சமூகவியல் பார்வையில் பேராசிரியர் நாராயணன், கேசவன் கூறிய வார்த்தையை மேற்கோள் காட்டினேன். தேவதாசி என்ற வார்த்தை உயர்ந்த குல பெண்களுக்கு வழங்கப்பட்ட சொல்.

ஆண்டாள் எனக்கும் தாய், அவர் தமிழச்சி, எனக்கு தாய்பால் ஊட்டிய அங்கம்மாள் என்னை பெற்ற தாய், எனக்கு தமிழ்பால் ஊட்டிய ஆண்டாள், நான் கற்ற தாய். அப்படிப்பட்டவரை நான் இழிவுப்படுத்துவேனோ, என்னை சந்தேகப்படலாமா. தேவசாசி என்று நான் கூறிய வார்த்தை திரிக்கப்பட்டு வேறு விதமாக பரப்பி விடப்பட்டுள்ளது. மதம் கலந்த அரசியலுக்காகவோ, அரசியல் கலந்த மதத்திற்காகவோ யாரோ சிலர் என் கருத்தை திரித்து கூறிவிட்டனர்.

இப்படிப்பட்ட கூட்டத்தில் நான் தமிழ் வளர்க்க வேண்டுமே என எண்ணி வெட்கப்படுகிறேன். இது எந்த வகையில் நியாயம். இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்டால் ஆண்டாளையும் புரிந்து கொள்வீர்கள், வைரமுத்துவையும் புரிந்து கொள்வீர்கள்.

தமிழரின் மனம் புண்பட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான் வருத்தம் தெரிவித்தேன். ஆனால் அப்படி இருந்தும் திரித்து பரப்புகிறார்கள். இனகலவரத்தை, மதக்கலவரத்தை தூண்ட பார்க்கிறார்கள். தமிழ் சமூகம் நீ ஞானசமூகம், புரிந்து கொள்வாய். நன்றி

இவ்வாறு வைரமுத்து கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in