ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மியூசிக் சேனல் ஒன்றின் நிகழ்ச்சியில், அதன் தொகுப்பாளர்கள், சூர்யா படத்தில் அமிதாப் நடிக்க இருப்பதைப் பற்றிப் பேசும்போது, சூர்யா எப்படி அமிதாப்புடன் இணைந்து எப்படி நடிப்பார், ஸ்டூல் மீது ஏறி நின்று நடிப்பாரா என நகைச்சுவையாகச் சொல்வதாகச் சொல்லிக் கொண்டு, கேவலமாகக் கமெண்ட் அடித்துள்ளனர். இது சூர்யா ரசிகர்களை கடும் கோபத்தை உண்டாக்கி உள்ளது. விஷால் உள்ளிட்ட திரையுலகினர் சிலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சூர்யாவின் ரசிகர்கள், சம்பந்தப்பட்ட சேனல் முன்பு கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோஷமிட்டனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பதட்டமான சூழல் நிலவியது. இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளார் சூர்யா.
இதுதொடர்பாக சூர்யா, தன் டுவிட்டரில்.... "தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி, நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற" என்று அறிவுறுத்தி உள்ளார்.