தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சின்னத்திரையின் நட்சத்திர தொகுப்பாளினி அஞ்சனா. கடந்த 10 ஆண்டுகளாக ஒரே மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக இருந்தார். அதோடு பொது வெளிகளில் நடக்கும் திரைப்படம் தொடர்பான விழாக்களில் தொகுப்பாளராகவும் இருந்தார். தற்போது அஞ்சனா, திடீரென தான் பணியாற்றிய சேனலில் இருந்து வெளியேறி விட்டார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது:
சொந்த காரணங்களுக்காக விடைபெறுகிறேன். தொகுப்பாளினியாக கடந்த 10 ஆண்டுகால பயணத்தில் மகிழ்ச்சி, அன்பு, சண்டை, ஏற்றம், இறக்கம் என எல்லாவித அனுபவங்களும் இருந்தது. என்மீது அளவு கடந்த அன்பு கொண்ட எல்லோருக்கும் கடன்பட்டிருக்கிறேன் என்று எழுதியிருக்கிறார்.
சின்னத்திரையில் இருந்து விலகினாலும் பொது விழாக்களில் தொகுப்பாளராக தொடர்ந்து பணியாற்ற முடிவு செய்திருக்கிறார். விலகலுக்கான காரணத்தை அஞ்சனா வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. இன்னும் சில மாதங்களில் அதைச் சொல்கிறேன் என்று கூறியுள்ளார். அஞ்சனாவுக்கும், நடிகர் கயல் சந்திரனுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.