ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
புதுடில்லி: பத்மாவத் ஹிந்தி படத்துக்கு எதிராக தொடரப்பட்ட, மற்றொரு வழக்கை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், பாதுகாப்பு அளிப்பது, சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பது, மாநிலங்களின் கடமை என, மீண்டும் கூறியுள்ளது.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், பாலிவுட் நடிகை, தீபிகா படுகோனே, நடிகர்கள், ஷாகித் கபூர், ரன்பீர் சிங் உள்ளிட்டோர் நடித்துள்ள, பத்மாவத் படத்துக்கு எதிராக, ராஜ்புத்ர சமூகத்தினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். சர்ச்சைகளுக்கு இடையே, சென்சார் போர்டு இந்த படத்துக்கு தணிக்கை சான்றிதழ் அளித்தது; 25ல், திரையிட திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த படத்தை திரையிட, மத்திய பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்கள் தடை விதித்தன. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அந்த தடையை நீக்கி உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த படத்துக்குதணிக்கை சான்றிதழ்வழங்கப்பட்டதை எதிர்த்து, வழக்கறிஞர், எம்.எல்.சர்மா என்பவர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ராதலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
தள்ளுபடி
படத்துக்கு கடும் எதிர்ப்பு உள்ளது. அதை மீறி வெளியிட்டு, வன்முறை சம்பவங்கள் நடந்தால், அதற்கு யார் பொறுப்பு? என, வழக்கறிஞர், சர்மா கேள்வி எழுப்பினார்.சட்டத்தின்படியே, நீதிமன்றம் செயல்பட முடியும். பாதுகாப்பு அளிப்பது எங்களுடைய வேலையில்லை. பாதுகாப்பு அளிப்பது, சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது, மாநிலங்களின் கடமை. அதை உறுதி செய்ய வேண்டும் என, ஏற்கனவே உத்தரவிடப்பட்டு உள்ளது என, அமர்வு கூறியது. இதையடுத்து, இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக அமர்வுஅறிவித்தது.
அனுமதிக்க மாட்டோம்
பத்மாவத் படத்தை வெளியிடுவதற்கு இருந்த தடைகள் நீங்கி உள்ள நிலையில், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் அளித்த, சென்சார் போர்டு தலைவருக்கு எதிராக, கார்னி சேனா அமைப்பு களமிறங்கி உள்ளது.பத்மாவத் படத்துக்கு எதிராக, கார்னி சேனா அமைப்பு பல போராட்டங்களை நடத்தியது. படத்தை வெளியிடுவதற்கு, சில மாநிலங்கள் விதித்த தடையை, உச்ச நீதிமன்றம், நேற்று முன்தினம் நீக்கியது. அதையடுத்து, பீஹாரில் ஒரு தியேட்டரை, இந்த அமைப்பினர் அடித்து நொறுக்கினர்.
இந்நிலையில், ராஜஸ்தானில், 25ல், ஜெய்ப்பூர் இலக்கிய திருவிழா நடக்க உள்ளது. இதில், சென்சார் போர்டு தலைவர், பிரசூன் ஜோஷி பங்கேற்க உள்ளார். ஜெய்ப்பூருக்குள் நுழைய, அவரை அனுமதிக்க மாட்டோம். அவருக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படும், என, கார்னி சேனா அமைப்பின் நிர்வாகி, சுக்தேவ் சிங் கூறியுள்ளார்.