'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் படம் சமீபத்தில் வெளிவந்தது. விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்திருந்தார். இந்தப் படத்தில் "சொடக்கு மேல சொடக்கு போடுது..." என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. இதனை நாட்டுப்புற பாடகர் அந்தோணி தாஸ் பாடியுள்ளார். இந்த பாடலில் "விரட்டி விரட்டி வெளுக்கத் தோணு, அதிகார திமிரை பணக்கார பவரை தூக்கி போட்டு மிதிக்க தோணுது..." என்ற வரிகள் இடம்பெற்றுள்ளது.
இந்த வரிகள் அரசியல்வாதிகளை மிரட்டுவதுபோல அமைந்துள்ளது. எனவே அந்த வரிகளை நீக்க வேண்டும் என்று அ.தி.மு.நிர்வாகி சதீஷ்குமார் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் "இந்த பாடல் அரசியல்வாதிகளையும், மிரட்டும் நோக்கிலும், கிண்டல் செய்யும் நோக்கிலும் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே பாடலுக்கு தடை விதிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருக்கிறார். மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வழக்கை வருகிற 27ந் தேதிக்கு ஒத்திவைத்தது.