தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரபல சினிமா பைனான்சியர் முகுன்சந்த் போத்ரா. இவர், நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் கஸ்தூரிராஜா ஆகியோர் மீது புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். போத்ரா தன்னை மிரட்டுவதாக நடிகர் ரஜினிகாந்த் புகார் கூறியிருந்தார். மிரட்டிப் பணம் பறித்த புகாரில் ஏற்கெனவே கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் போத்ரா.
போத்ராவின் மகன்களும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து தன் மீதான வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்யுமாறு ரஜினி, சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். இதனை ஏற்ற ஐகோர்ட், வழக்கை தள்ளுபடி செய்தது. இந்நிலையில் தன் மீது அவதூறு புகார் கூறியதாக போத்ரா, ரஜினி மீது வழக்கு தொடர்திருந்தார். இவ்வழக்கை இன்று (ஜன.,19) விசாரித்த ஐகோர்ட் நீதிபதிகள், ஜனவரி 25 ம் தேதிக்குள் பதிலளிக்க ரஜினிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்.