ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த படம் கத்தி. இந்த படத்தில் வில்லனாக நடித்தவர் இந்தி நடிகர் நீல்நிதின் முகேஷ். இவர் தற்போது பிரபாஸின் சாஹோ படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாராகி வரும் இந்த படத்தில் முந்தைய படங்களை விடவும் பிரமாண்ட வில்லனாக நடித்துக்கொண்டிருக்கிறார் நீல்நிதின் முகேஷ்.
பிரபாசுடன் சாஹோ படத்தில் நடிப்பது பற்றி அவர் கூறுகையில், பாகுபலி நாயகன் பிரபாசுடன் நடிப்பது சவாலாக உள்ளது. அவருக்கு ஈடு கொடுத்து நடிக்க வேண்டும் என்பதற்காக நிறைய ரிஸ்க் எடுக்கிறேன். குறிப்பாக, சண்டைக்காட்சிகளில் நிறைய சாகசங்கள் செய்ய வேண்டியதிருந்தது. அதனால், இதுவரை எந்த படத்திற்கும் எடுக்காத ரிஸ்க் எடுத்து கஷ்டப்பட்டு நடித்து வருகிறேன்.
அதோடு, தமிழ், தெலுங்கு எனக்கு தெரியாத மொழிகள் என்றபோதும் சரியாக வார்த்தைகளை உச்சரித்து நடித்துக்கொண்டிருக்கிறேன். அந்த வகையில் சாஹோ படம் எனக்கு எல்லா வகையிலும் சேலஞ்சிங்கான படமாக அமைந்துள்ளது. அதோடு, தெலுங்கில் நான் அறிமுகமாகும் இந்த சாஹோ படம் அதிரடி வில்லனாக என்னை வெளிப்படுத்தப்போகிறது என்கிறார் நீல் நிதின் முகேஷ்.