மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
நடிகர் பிரகாஷ்ராஜ் ஐதராபாத்தில் ஆங்கில டி.வி.சேனல் ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பார்வையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்து பிரகாஷ்ராஜ் பேசியதாவது:
நான் அமைதியாகத்தான் இருந்தேன். நான் உண்டு என் வேலை உண்டு என்றுதான் இருந்தேன். பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொல்லப்பட்டதை விழாவாக கொண்டாடினார்கள். அதை என்னால் தாங்க முடியவில்லை. அந்த கொலை பற்றி நாட்டின் பிரதமர் வாய்திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை. கொலைகளை ஆதரிப்பவர்கள் எப்படி இந்துக்களாக இருக்க முடியும். என்னை இந்துக்களுக்கு எதிரானவன் என்கிறார்கள். மற்ற மதத்தினரை புண்படும்படி பேசுகிறவர்கள் எப்படி இந்துக்களாக இருக்க முடியும். மோடியும், அமித்ஷாவும்தான் இந்துக்களுக்கு எதிரானவர்கள்.
பாஜக என் மீது வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு நான் காங்கிரஸ் அரசிடம் இருந்து கர்நாடகாவில் ஒரு எச்எஸ்ஆர் நிலத்தை வாங்கினேன் என்பது தான். எனக்கு எவ்வளவு ஏக்கர் நிலம் இருக்கிறது என்பதே அவர்களுக்குத் தெரியாது. 30 வருடங்களாக 5 மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நான் நடித்துள்ளேன். இதற்காக நான் எவ்வளவு சம்பளம் வாங்கி இருக்கிறேன் என்று தெரியுமா. என்னுடைய வருமானம் என்னவென்று என் மீது குற்றம்சாட்டுபவர்களுக்குத் தெரியுமா? நான் ஒரு கிராமத்தை தத்தெடுத்திருக்கிறேன், அங்கு 6 ஏக்கர் நிலத்தை பள்ளி கட்டுவதற்காக அளித்துள்ளேன். அண்மையில் என்னுடைய 2 ஏக்கர் நிலத்தை ஒரு சமுதாய நலக்கூட கட்டுமான பணிக்காக இலவசமாக அளித்துள்ளேன். அதுவாவது இவர்களுக்கு தெரியுமா? என்றார் பிரகாஷ்ராஜ்.