வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
விக்னேஷ்சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து திரைக்கு வந்துள்ள படம் தானா சேர்ந்த கூட்டம். இந்த படத்தின் சக்சஸ் பிரஸ்மீட் நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவுக்கு சூர்யா வரமாட்டார் என்று படத்தின் தயாரிப்பாளரான ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா முதலில் சொன்னார். அதோடு, படத்தின் பிரமோஷனுக்காக ஐதராபாத்திற்கு சென்றபோது அவருக்கு புட்பாய்சனாகி விட்டதாகவும் காரணம் சொன்னார்.
ஆனபோதும் சக்சஸ் மீட் முடியும் தருவாயில் இருந்தபோது திடீரென்று சூர்யா என்ட்ரி கொடுத்தார். அதையடுத்து படக்குழுவினர் அவருடன் இணைந்து போட்டோ எடுத்துக்கொண்டனர். அந்த விழாவில் ரம்யாகிருஷ்ணனும் கலந்து கொண்டார். ஆனால் தானா சேர்ந்த கூட்டம் சக்சஸ் பிரஸ்மீட் முடிந்ததும் அதே அரங்கில் அனுஷ்காவின் பாகமதி படத்தின் ஆடியோ விழாவும் நடைபெற்றது.
அந்த விழாவுக்கு அனுஷ்கா வருகிறார் என்றதும் அவரை காண வேண்டும் என்பதற்காக நீண்டநேரமாக அவருக்காக காத்திருந்தார் ரம்யாகிருஷ்ணன். அனுஷ்கா வந்ததும் அவருடன் நின்று போட்டோக்களை எடுத்துக்கொண்டு பாகமதி பட விழா முடிந்த பின்னரே அங்கிருந்து புறப்பட்டு சென்றார் ரம்யாகிருஷ்ணன்.