'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் மாற்றம் வரும் என நடிகர் விஷால் கூறினார். ஆங்கில டிவி., சேனல் சார்பில் கருத்தரங்கு நடந்தது. இதில் விஷால் பங்கேற்று பேசியதாவது...
ரஜினி, கமல் ஆகியோருக்கு அரசியலுக்கு தாமதமாக வந்தாலும் அவர்களின் முடிவு சரியானதாக தெரிகிறது. இருவரும் களத்தில் இருப்பதால் மக்கள் யாருக்கு ஓட்டளிப்பார்கள் என்று கணிக்க முடியாது. ஆனால், வரும் சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் நிச்சயம் மிகப்பெரிய மாற்றம் வரும் என்பது மட்டும் உறுதி.
ஆர்.கே.நகர் தேர்தலில் எனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது ஜனநாயக படுகொலை, ஆனால் அதுவே என்னை வலிமையாக்கி உள்ளது. அரசியல்வாதிகள் நடிகர்களாக இருக்கும்போது, நடிகர்கள் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது.
இவ்வாறு விஷால் கூறினார்.