'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
கௌதம் கார்த்திக்கை குத்தகைக்கு எடுத்துக் கொண்டுவிட்டது ஸ்டுடியோ கிரீன் பட நிறுவனம். கடல் படத்தில் மணிரத்னம் அறிமுகப்படுத்தியும் போணியாகாத ஹீரோவாக இருந்தார் கௌதம் கார்த்திக். அவரது கேரியரில் வெற்றிப்படமாக 'ஹர ஹர மஹாதேவகி' படம் அமைந்தது. இப்படத்தை சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கினார்.
இப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் தற்போது 'இருட்டு அறையில் முரட்டு குத்து' என்ற படத்தில் நடித்துள்ளார் கௌதம் கார்த்திக். இந்தப்படத்தையும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனமே தயாரித்திருக்கிறது. ஹர ஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து படங்களைத் தொடர்ந்து தற்போது ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துடன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளார் கௌதம் கார்த்திக்.
கொம்பன், மருது, கொடி வீரன் ஆகிய படங்களை இயக்கிய முத்தையா இந்தப்படத்தை இயக்குகிறார். 'தேவராட்டம்' என பெயர் சூட்டப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் முதல் வாரத்தில் துவங்க உள்ளது. இப்படத்தின் கதையை முதலில் சூர்யாவிடம் சொன்னார் முத்தையா. கதையில் சாதி நெடி அதிகம் இருந்ததால் அதில் நடிக்க மறுத்துவிட்டார்.
அதே கதையை கௌதம் கார்த்திக்கிடம் சொல்லும்படி கேட்டுக்கொண்டாராம் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா. முத்தையாவின் கதையில் தன்னுடைய சாதிப்பாசம் வெளிப்பட்டிருப்பதை புரிந்து கொண்டு நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம் கௌதம் கார்த்திக்.