இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
தமிழ்த் திரையுலகத்தில் இசை வெளியீட்டு விழாக்கள் மட்டுமே நடந்து வந்த நிலையில், சமீப காலங்களில் டிரைலர், டீசர் வெளியீட்டு விழாக்களும் நடைபெற ஆரம்பித்தன. அந்த வரிசையில் இப்போது 'சிங்கிள் பாடல்' வெளியீட்டு விழாக்களும் வர ஆரம்பித்துவிட்டன.
தமிழ்த் திரையுலகத்தில் பல படங்களை தந்த தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தற்போதும் பல படங்களைத் தயாரித்து வருகிறது. நேற்று, சென்னை, வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் அந்த நிறுவனம் நான்கு நிகழ்ச்சிகளை நடத்தி திரையுலகத்தினரையும் வியக்க வைத்தது.
'கஜினிகாந்த்' படத்தின் சிங்கிள் பாடல் வெளியீடு, 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தின் சிங்கிள் பாடல் வெளியீடு, 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் வெற்றி விழா, 'பாகமதி' படத்தின் இசை வெளியீடு என நான்கு விழாக்களை ஒரே அரங்கில் அடுத்தடுத்து நடத்தி முடித்தார்கள்.
ஒவ்வொரு படத்தின் நட்சத்திரங்களும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். 'கஜினிகாந்த்' படத்தின் நாயகன் ஆர்யா, நாயகி சாயிஷா, படக்குழுவினர், 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தின் நாயகன் கௌதம் கார்த்திக், நாயகி வைபவி சாண்டில்யா, படக்குழுவினர், 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் நாயகன் சூர்யா, இயக்குனர் விக்னேஷ், இசையமைப்பாளர் அனிருத், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர், 'பாகமதி' படத்தின் நாயகி அனுஷ்கா, படக்குழுவினர் என பெரும்பாலானோர் விழாவிற்கு வந்தனர்.
ஒரே நாளில், ஒரே இடத்தில் அடுத்தடுத்து நான்கு பட விழாக்களை நடத்தியது சிக்கனமாகத் தெரிந்தாலும், விழாவில் அனைவரும் கலந்து கொண்டதால் அது பிரம்மாண்டமான விழாவாகவும் அமைந்துவிட்டது.