'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ்த் திரையுலகத்தில் ஒரு காலத்தில் கன்னடப் படங்களும் தமிழில் டப்பிங் ஆகி வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்றன. அவற்றில் 80களில் வந்த 'பருவ ராகம், முதல் இரவே வா வா' ஆகிய படங்கள் முக்கியமானவை. 'பருவ ராகம்' படத்தின் பாடல்கள் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றன. அதுவே அந்தப் படத்தின் வெற்றிக்கு பெரிய காரணமாக அமைந்தது. ரவிச்சந்திரன், ஜுலி ஆகியோர் அந்தப் படத்தில் நடித்திருந்தனர்.
அந்த கால கட்டத்தில் பெரிய வெற்றியைப் பெற்ற மற்றொரு படம் 'முதல் இரவே வா வா'. காசிநாத் இயக்கி நாயகனாக நடித்த படம் அது. படத்தின் தலைப்பே இது ஒரு 'அடல்ட்' படம் என்பதைச் சொல்லிவிடும். 'அடல்ட் காமெடி' படமாக அப்போது வெளிவந்த இந்தப் படம் தமிழிலும் பெரிய வெற்றியைப் பெற்றது. இப்போதும் யு டியூபில் தேடினால் நீங்கள் இந்தப் படத்தைப் பார்க்கலாம்.
கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் படங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர் காசிநாத். 40 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். 80களில் முன்னணி கன்னட நடிகர்களில் ஒருவராக விளங்கியவர். இன்று காலை உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார். அவருடைய மறைவுக்கு கன்னடத் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.