டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ்நாட்டில் ரஜினியும், கமலும் அரசியலில் களமிறங்குவதாக அதிகாரபூர்வமாக அறிவித்து விட்டார்கள். அதற்கான வேலைகளையும் தொடங்கி விட்டார்கள். இதேபோன்று கர்நாடக அரசியலில் பிரகாஷ்ராஜ் களமிறங்குவார் என தெரிகிறது.
பொதுவாக தமிழ்நாடு, ஆந்திரா போன்று கர்நாடக மக்கள் சினிமா நடிகர்களை அரசியல்வாதிகளாக ஏற்பதில்லை. கர்நாடக சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரை ரசிகர்கள் தெய்வமாக கொண்டாடுவார்கள். ஆனால் அவரே அரசியலுக்கு வருதை அந்த மாநில மக்கள் விரும்பவில்லை.
ஆனால் இன்றைக்கு நிலைமை மாறியிருக்கிறது. அமைதியாக இருந்த பிரகாஷ்ராஜ் அரசியல் பேச ஆரம்பித்தது, அவரது தோழியும், பத்திரிகையாளருமான கவுரி லங்கேஷ் கொல்லப்பட்ட பிறகுதான். இந்த விஷயத்தில் அவர் பிரதமரையே "என்னை விட மோடி சிறந்த நடிகர்" என்று விமர்சித்தது கர்நாடக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
"எனக்கு அரசியல் ஆர்வம் இல்லை. ஆனால் என்னை அரசியலுக்குள் இழுத்து விடுவார்கள் போலிருக்கிறது" என்ற அண்மையில் பிரகாஷ்ராஜ் கூறியிருந்தார்.
அண்மையில் கர்நாடக மாநிலம் சிர்சி நகரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய பிரகாஷ்ராஜ், அந்த பகுதியை சேர்ந்த உத்தர கண்டா தொகுதி பாரதிய ஜனதா எம்.பியும் மத்திய அமைச்சருமான அனந்த குமார் ஹெக்டேவை கடுமையாக விமர்சித்தார். இதனால் கோபம் அடைந்த அவரது ஆதரவாளர்கள் பிரகாஷ்ராஜ் பேசிய இடத்தை சுற்றி பசுவின் கோமியத்தை தெளித்து சுத்தமாக்கினர்.
இதனை தனது பேஸ்புக்கில் கிண்டலடித்துள்ள பிரகாஷ்ராஜ் "நான் செல்லும் இடங்களில் எல்லாம் இப்படி சுத்தம் செய்வார்களா?" என்று கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் தவிர்க்க முடியாத ஒரு அரசியல்வாதியாக பிரகாஷ்ராஜ் உருவாகி வருகிறார் என கூறப்படுகிறது.