ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களின் மூலம் இந்தியத் திரையுலகத்தில் மிகப் பெரும் வசூல் சாதனையைப் புரிந்தவர் இயக்குனர் ராஜமௌலி. ஹிந்தித் திரைப்படங்கள் மட்டும்தான் பெரிய அளவில் வசூலிக்க முடியும் என்றிருந்ததை முறியடித்து ஒரு தெலுங்குப் படத்தாலும் அப்படி ஒரு சாதனையைப் புரிய முடியும் என்று மாநில மொழித் திரையுலகங்களுக்குப் புரிய வைத்தார்.
'பாகுபலி 2' படம் வெளிவந்து எட்டு மாதங்களுக்கு ஆன பின்னும் அவர் தன்னுடைய அடுத்த படத்தை ஆரம்பிக்காமல் உள்ளார். வரும் அக்டோபர் மாதம் தான் அப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ராம்சரண் தேஜா, ஜுனியர் என்டிஆர் நாயகர்களாக நடிக்க உள்ள அந்தப் படத்திற்காக இயக்குனர், ஹீரோக்கள் சம்பளம் இல்லாமல் சுமார் 90 கோடி வரை ராஜமௌலி பட்ஜெட் கொடுத்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. 'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களும் சேர்த்து தயாரிப்புச் செலவு மட்டும் 300 கோடி என்று செய்திகள் வெளியாகின.
இயக்குனர் ராஜமௌலி, நாயகர்கள் ராம்சரண் தேஜா, ஜுனியர் என்டிஆர் ஆகியோரது சம்பளத்தையும் சேர்த்தால் படத்தின் பட்ஜெட் 150 கோடியைத் தாண்டும் என்கிறார்கள். அதனால், படத்தைத் தெலுங்கில் மட்டுமல்லாது, தமிழ், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.