டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ்சினிமா நடிகர்களில் பகுத்தறிவுவாதியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் சத்யராஜ். அவரே பின்னர் தன்னுடைய கொள்கைக்கு மாறாக ஜாக்சன் துரை என்ற படத்தில் பேய்ப்படத்தில் நடித்தார். அந்தப்படத்தில் அவர் நடித்த கதாபாத்திரமே பேய்தான்.
இந்நிலையில் தற்போது மற்றொரு பேய்ப்படத்தில் நடிக்கிறார் சத்யராஜ். மிஷ்கினிடம் உதவியாளராக இருந்த வடிவேல் என்பவர் 'கள்ளப்படம்' என்ற படத்தை இயக்கினார். அந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
இந்நிலையில் தன்னுடைய பெயரை வேல் என்று மாற்றிக் கொண்டு சூப்பர் நேச்சுரல் கதையம்சம் கொண்ட படத்தை அடுத்து இயக்குகிறார். எப்.எம். ரேடியோ ஸ்டேஷன் பின்னணியில் நடக்கும் இந்த படத்தில் சத்யராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்க இருக்கிறார்.
பேய்ப்படமாக உருவாகவிருக்கும் இந்த படம் குறித்து இயக்குநர் வேல், ''ஒரு படத்துக்கு பொருத்தமான நடிகர்கள் தேர்வு மிக முக்கியம் என்பதை நம்புபவன் நான். இந்த படத்தில் சத்யராஜ் நடிக்க ஒப்புக்கொண்டதும் எனது பாதி வேலை முடிந்துவிட்டது. இந்த படத்திற்கு சத்யராஜ் சாரை விட பொருத்தமான நடிகர் வேறு யாரும் இல்லை! ஒரு ரேடியோ ஸ்டேஷனில் இரவில் நடக்கும் அசாதரண சம்பவங்களே இந்த படத்தின் மைய கரு. கதை தத்ரூபமாக அமைய வேண்டும் என்பதற்காக ஒரு நிஜ எப்.எம்.ஸ்டேஷனிலேயே இப்படத்தை படமாக்க இருக்கிறோம்.” என்கிறார்.
நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. பகுத்தறிவு பேசுகிறவர் பேய்ப் படத்தில் நடிப்பது சரியா? மக்கள்தான் சொல்ல வேண்டும்?