பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
தெலுங்குத் திரையுலகில் குறிப்பிடப்படும் இளம் ஹீரோக்களில் நாக சௌரியா-வும் ஒருவர். விஜய் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் 'கரு' படத்தின் மூலம் தமிழுலும் அறிமுகமாக உள்ளார். இப்படத்தின் மூலம் தான் சாய் பல்லவி தமிழில் அறிமுகமாக உள்ளார்.
தெலுங்கில் 'பிடா, எம்சிஎ' இரண்டே இரண்டு படங்களில் நடித்து தெலுங்கு இளைஞர்களின் தூக்கத்தைக் கெடுத்து பிரபலம் ஆகியிருப்பவர் சாய் பல்லவி. அவருக்குக் கிடைக்கும் புகழைத் தாங்க முடியாமல், சாய் பல்லவி பற்றி நாக சௌரியா சமீபத்தில் டிவி பேட்டி ஒன்றில் ''சாய் பல்லவி, யாரிடமும் சரியாக நடந்து கொள்ள மாட்டார். அவருடைய நடவடிக்கையால் 'கரு' செட்டில் உள்ள எல்லாருடைய வாழ்க்கையும் மிகவும் துன்பமாகவே இருந்தது,” என்று பேசியிருக்கிறார்.
இது பற்றிக் கேள்விப்பட்டதும் தன்னுடன் நடித்த சக நாயகன் மீது சாய் பல்லவி பயங்கர கடுப்பில் இருக்கிறாராம். தன்னைப் பற்றி மோசமாகப் பேசிய நாக சௌரியாவுக்கு சரியான சமயத்தில் பதிலடி கொடுக்கவும் திட்டமிட்டுள்ளாராம். தன்னை விட சாய் பல்லவிக்கு அதிக பிரபலம் இருப்பதுதான் நாக சௌரியாவின் கமெண்ட்டுக்கக் காரணம் என டோலிவுட்டில் சொல்கிறார்கள்.
தமிழில் 'கரு' படத்தில் அறிமுகமாவதற்கு முன்பே சூர்யா மற்றும் தனுஷ் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் சாய்பல்லவி. நாக சௌரியா பேசியது போன்ற செய்திகள் தமிழில் பரவினால் சாய் பல்லவியின் இமேஜ் படம் வருவதற்கு முன்பே டேமேஜ் ஆகிவிடும்.