நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? |
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு கமல்ஹாசன் தீவிரமாக அரசியல் கருத்துக்களை கூறி வந்தார். ஆளும் கட்சியை கடுமையாக சமூக வலைத்தளங்களில் விமர்சித்தும், மேடைகளில் பேசியும், பத்திரிகைகளில் எழுதியும் வந்தார். அரசியல் கட்சி தொடங்கி முழுநேர அரசியலில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்தார்.
அரசியல் கட்சி தொடங்க தன்னை தயார்படுத்தி வருவதாகவும், தொடங்க பயம் எதுவும் இல்லை என்றும் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் வருகிற பிப்ரவரி 21ந் தேதி புதிய கட்சியை தொடங்கப்போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று இரவு கமல் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
என்னை வளர்த்த என் சமூகத்துக்கு நிறைய நன்றி சொல்லியிருக்கிறேன். சொல்லில் சொன்ன நன்றியை தாண்டி கடமைகள் நிறைய இருக்கின்றன. அந்த கடமைகளின் தொடக்கமாக எம் மக்களை நேரில் சந்திக்கும் அரசியல் பயணத்தை நான் பிறந்த ராமநாதபுரத்தில் இருந்து பிப்ரவரி 21-ந் தேதி தொடங்க இருக்கிறேன். அன்று கட்சி பெயரை அறிவிக்கிறேன். ஆரம்பகட்ட சுற்றுப்பயணத்தில் மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட மக்களை சந்திக்க திட்டமிட்டு உள்ளேன். இது நீண்ட நாட்களாக திட்டமிட்டிருந்த பயணம். மக்களுடனான இந்த சந்திப்பு புரட்சி முழக்கமோ, கவர்ச்சி கழகமோ அல்ல. என் புரிதல், எனக்கான கல்வி.
இது என் நாடு. இதை நான் காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு மாத்திரம் இருந்தால் போதாது. இங்கு தலைவன் என்பவன் வழி நடத்த மாத்திரமன்று. பின் பற்றவே தலைவன் இருக்க வேண்டும். பின்தொடர்வதற்கே ஒரு தலைமை பொறுப்பு இருக்க வேண்டும். நாமெல்லாம் சேர்ந்து இந்த தேரை இழுக்கிறோம் என்ற எண்ணம் வேண்டும். அதுவே ஜனநாயகம். அந்த நாயகர்களை சந்திக்கத்தான் நான் சென்று கொண்டிருக்கிறேன்.
இது ஆட்சியை பிடிப்பதற்கான திட்டமா? என்று கேட்பார்கள். ஆட்சியை ஒரு தனி ஆள் பிடிக்க முடியுமா? யாரின் ஆட்சி, யாரின் அரசு குடியின் அரசு. அப்படி என்றால் முதலில் அவர்களை உயர்த்த வேண்டும். அதற்கான கடமைகளை நினைவுபடுத்த வேண்டும். அதை நோக்கிய பயணம் இது. உங்களின் ஆதரவோடு இந்த பயணத்தை தொடங்குகிறேன். கரம் கோர்த்திடுங்கள். களத்தில் சந்திப்போம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.