டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பெரும்பாலும் ஒரு படம் வெளியாகி ஹிட்டான பின்பு, அடுத்த நாளிலேயே இது தன்னுடைய கதை என சிலர் புகார் மடல் வாசிப்பதுண்டு. சமீபத்தில் அறம், அருவி படங்களுக்கு கூட அப்படி சர்ச்சையான நிகழ்வுகள் நடந்தன. அதேசமயம் சமீபத்தில் பொங்கலுக்கு வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ஸ்கெட்ச்' படத்தை பார்த்துவிட்டு, இது தன்னுடைய குறும்படத்தின் கதை என போர்க்கொடி தூக்கியுள்ளார் இயக்குனர் சாய் பிள்ளை என்பவர்.
2௦15-ஆம் வருடத்தில் இவர் 'முருகா' அசோக் குமாரை வைத்து 'ஸ்கெட்ச்' என்கிற 25 நிமிடம் ஓடக்கூடிய குறும்படத்தை இயக்கி, அதை யூடியூப்பிலும் வெளியிட்டுள்ளார். இந்தநிலையில் 'ஸ்கெட்ச்' படத்தை பார்த்துவிட்டு தனது குறும்படத்தின் கான்செப்ட்டை அப்படியே காப்பியடித்து இந்தப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக்கில் குமுறி வருகிறார் சாய் பிள்ளை.
பைனான்ஸியர்களிடம் சரியாக ட்யூ கட்டாதவர்களின் கார்களை தூக்கி வரும் வேலை பார்க்கும் நாயகனின் கதை தான் 'ஸ்கெட்ச்'. சாய் பிள்ளை இயக்கியுள்ள குறும்படத்திலும் ட்யூ கட்டாத கார்களை தூக்குவது தான் கான்செப்ட் என்றாலும் இதைமட்டுமே வைத்து 'ஸ்கெட்ச்' படம் தன்னுடைய கதை என அவர் சொல்வது அவ்வளவு ஏற்புடையதாக இல்லை.