டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவில் சிறந்த டிவி நடிகருக்கான விருது பெற்றவர் ஆசிஷ் அன்சாரி. இவர் அமெரிக்காவில் புகழ்பெற்ற தொலைக்காட்சி நடிகர். இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்.
இந்த நிலையில் ஆசிஷ் அன்சாரி மீது ஒரு இளம் பெண் பாலியல் புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறார். இதுகுறித்து அந்த பெண் கூறியிருப்பதாவது: கோல்டன் குளோப் விருது விழாவின் போது தான் ஆசிஷ் அன்சாரியின் நட்பு கிடைத்தது. அவர் அன்புடன் பேசியது என்னை கவர்ந்தது. விழா முடிந்ததும் என்னை, அவரது நியூயார்க் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அவரை நம்பி சென்றேன். ஆனால் வீட்டில் வைத்து என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்று கூறியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த அன்சாரி, அந்த பெண் அவரது விருப்பத்தின் பேரிலேயே எனது வீட்டுக்கு வந்தார். மற்றபடி அவர் கூறியது போல் எந்த சம்பவமும் நடக்கவில்லை. வேண்டுமென்றே வீண் பழி சுமத்துகிறார். என்று கூறியுள்ளார்.
கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவில் பேசிய பெரும்பாலான நடிகைகள், தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து மறைமுகமாக பேசியது குறிப்பிடத்தக்கது.