‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த படம் கோடைமழை. இந்தப் படத்தை மறுவெளியீடு செய்து தருவதாக கூறி ஸ்டூடியோ 9 ஆர்.கே.சுரேஷ் பல லட்சம் மோசடி செய்து விட்டதாக படத்தின் தயாரிப்பாளர் அலெக்சாண்டர், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் சுருக்கம் வருமாறு:
யாழ் தமிழ்த்திரை என்ற நிறுவனத்தை தொடங்கி, நண்பர்களுடன் இணைந்து கோடைமழை என்ற படத்தை தயாரித்தேன். சினிமா வியாபாரம் பற்றி அதிகம் தெரியாததால் படத்தை 27 தியேட்டர்களில் மட்டுமே வெளியிட முடிந்தது. படத்தை பற்றி நல்ல விமர்சனங்கள் வந்தது. ஆனாலும் தியேட்டரிலிந்து எடுத்து விட்டார்கள்.
இந்த நிலையில் எங்கள் படத்தை பார்த்த ஆர்.கே.சுரேஷ் நல்ல படமாக இருக்கிறது. இதை நான் மறுவெளியீடு செய்து தருகிறேன். 90 தியேட்டர்களில் வெளிடுகிறேன். அதற்கு 40 லட்சம் செலவாகும் என்றார். அதை நம்பி நாங்களும், 25 லட்சம் ரூபாய் முன்பணம் கொடுத்தோம்.
ஆனால் சொன்னபடி 90 தியேட்டர்களில் வெளியிடாமல் 11 தியேட்டர்களில் மட்டும் வெளியிட்டார். நாங்கள் கொடுத்த பணத்திற்கு கணக்கும் தரவில்லை. செலவு போக மீதம் என்று 11 லட்சத்துக்கு காசோலை கொடுத்தார். அதுவும் திரும்பி வந்து விட்டது. எனவே தயாரிப்பாளர் சங்கம், அவர் மீது நடவடிக்கை எடுத்து எங்கள் பணத்தை திரும்ப பெற்றுத் தரும்படி கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.