மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
எழுத்தாளர் ஞாநி உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். சென்னை கே.கே.நகரில் உள்ள ஞாநியின் வீட்டிற்கு சென்ற ரஜினி, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, ஞாநி எனக்கு நல்ல நண்பர். சிறந்த எழுத்தாளர். மக்களுக்காக பேசக் கூடியவரும், எழுதக் கூடியவருமான ஞாநியின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது. தனக்கு சரியென்று பட்டதை பயமின்றி பேசவும், எழுதவும் கூடியவர் ஞாநி. அவரது குடும்பத்தாருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.