ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஹீரோயிசத்தை மனதில் கொள்ளாமல் கதைக்கும், கதாபாத்திரங்களுக்கும் முதலிடம் கொடுக்கக்கூடியவர் விஜயசேதுபதி. அதோடு பாசிட்டீவ், நெகடீவ் என கலந்து நடித்து வருபவர், தற்போது மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் மல்டி ஹீரோ கதையில் நடிக்கிறார். சிம்பு, விஜயசேதுபதி, ஜோதிகா, பகத்பாசில் நடிக்கும் இந்த படத்தில் விஜய சேதுபதிக்கு மணிரத்னம் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த படத்தில் விஜய்சேதுபதி ஒரு போலீஸ் வேடத்தில் நடிப்பதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே சேதுபதி என்ற படத்தில் போலீசாக நடித்து கலக்கியவர் விஜயசேதுபதி. அதன்பிறகு விக்ரம் வேதா படத்தில் போலீசாக நடித்த மாதவனுடன் வேதா என்கிற ரவுடியாக மோதினார். அப்படிப்பட்ட விஜயசேதுபதி மணிரத்னம் இயக்கும் படத்தில் நல்ல போலீசாக நடிக்கிறாரா? இல்லை கெட்ட போலீசாக நடிக்கிறாரா? என்பது சஸ்பென்சாக உள்ளது.