தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழில் நரகாசூரன் படத்தில் நடித்து வரும் ஸ்ரேயா, தெலுங்கில் பைசா வசூல் படத்தை அடுத்து காயத்ரி, வீரபோக வசந்த ராயலு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் காயத்ரி என்ற படம் பிப்ரவரி 9-ந்தேதி திரைக்கு வருகிறது. இதையடுத்து சுஜானா இயக்கும் ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார் ஸ்ரேயா. இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்குகிறது.
மேலும், இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இந்த படத்தில் சேரியில் வாழும் கூலித் தொழிலாளியாக நடிக்கிறார் ஸ்ரேயா. அதோடு அப்பாவி பெண்ணாக நடிக்கும் அவரைச்சுற்றித்தான் மொத்த கதையும் நகர்கிறதாம். அந்த வகையில், இந்த படத்தில் கதையின் நாயகியாக நடிக்கும் ஸ்ரேயா, முதன்முறையாக அழுக்கு உடையணிந்து கருப்பு நிறத்திற்கு மாறி நடிக்கப்போகிறாராம்.