புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
தமிழில் நரகாசூரன் படத்தில் நடித்து வரும் ஸ்ரேயா, தெலுங்கில் பைசா வசூல் படத்தை அடுத்து காயத்ரி, வீரபோக வசந்த ராயலு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் காயத்ரி என்ற படம் பிப்ரவரி 9-ந்தேதி திரைக்கு வருகிறது. இதையடுத்து சுஜானா இயக்கும் ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார் ஸ்ரேயா. இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்குகிறது.
மேலும், இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இந்த படத்தில் சேரியில் வாழும் கூலித் தொழிலாளியாக நடிக்கிறார் ஸ்ரேயா. அதோடு அப்பாவி பெண்ணாக நடிக்கும் அவரைச்சுற்றித்தான் மொத்த கதையும் நகர்கிறதாம். அந்த வகையில், இந்த படத்தில் கதையின் நாயகியாக நடிக்கும் ஸ்ரேயா, முதன்முறையாக அழுக்கு உடையணிந்து கருப்பு நிறத்திற்கு மாறி நடிக்கப்போகிறாராம்.