ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கொரட்டல்ல சிவா இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்து வரும் படம் பாரத் அனே நேனு. கியாரா அத்வானி நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ஏப்ரல் 27-ந்தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் நிலையில் இதுவரை படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகவில்லை.
அதனால் சங்கராந்திக்கு வெளியாகும் என்று மகேஷ்பாபுவின் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் பர்ஸ்ட் லுக் சங்கராந்திக்கு வெளியாக வாய்ப்பில்லை என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து மகேஷ்பாபுவின் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இதையடுத்து, சங்கராந்திக்கு பர்ஸ்ட் லுக்கை வெளியிட வேண்டும் என்று மகேஷ்பாபு கேட்டுக்கொண்டதை அடுத்து பாரத் அனே நேனு படத்தின் முதல் தோற்றத்தை ஜனவரி 15-ந்தேதி வெளியிடப்படும் என்று கொரட்டல்ல சிவா அறிவித்துள்ளார். இதனால் மகேஷ்பாபுவின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.