ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சில தினங்களுக்கு முன் மலையாள இயக்குனர் ஆர்.எஸ்.விமல் என்பவர் இயக்கத்தில் இந்தியில் 'மஹாவீர் கர்ணா' என்கிற படத்தில் விக்ரம் 'கர்ணன்' ஆக நடிக்கவுள்ளார் என்கிற செய்தி வெளியானது. முதலில் பிருத்விராஜை வைத்து மலையாளத்தில் இந்த 'கர்ணன்' படத்தை இயக்கப்போவதாகத்தான் கடந்த இரண்டு வருடங்களாக இந்த கதையில் வேலை பார்த்தார் இயக்குனர் விமல்
ஆனால் படத்தின் பட்ஜெட் அதிகமாக உள்ளது என்று 'கர்ணன்' படம் கைவிடப்பட்டதாக சில மாதங்களுக்கு முன் தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்தப்படம் கைவிடப்பட்டதன் பின்னணியில் வேறு காரணம் இருப்பதாக ஒரு தகவல் கசிந்துள்ளது.
அதாவது இயக்குனர் ஆர்.எஸ்.விமல் பிருத்விராஜை வைத்து என்னு நிண்டே மொய்தீன்' என்கிற ஹிட் படத்தை கொடுத்தார் அல்லவா..? அதில் இசையமைப்பாளர்களாக பிரபல இசையமைப்பாளர் ஜெயச்சந்திரன் மற்றும் அறிமுக இசையமைப்பாளரான ராஜேஷ் முருகேஷன் ஆகியோர் இணைந்து பணியாற்றி இருந்தனர்.
இதில் ராஜேஷ் முருகேசனை சிபாரிசு செய்தவர் பிருத்விராஜ் தான். அந்தப்படத்தின் பாடல்கள் ஹிட்டானதுடன், ராஜேஷ் முருகேசனுக்கு கேரள அரசு விருதும் கிடைத்தது. இதனால் 'கர்ணன்' படத்திற்கு முழுதுமாக அவரையே இசையமைக்க வைக்கும்படி பிருத்விராஜ் வலியுறுத்தினாராம்.
ஆனால் இயக்குனர் விமலின் விருப்பமோ ஜெயச்சந்திரனையே பயன்படுத்தவேண்டும் என்பதாக இருந்ததாம். இதில் ஏற்பட்ட ஈகோ மோதலில் தான், பட்ஜெட்டை காரணம் காட்டி படத்தை நிறுத்தும்படி பிருத்விராஜ் செய்துவிட்டார் என சொல்லப்படுகிறது.