'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் தனது அரசியல் வருகை குறித்து அறிவித்தார். தனது அரசியல் அறிவிப்பிற்கு பிறகு எந்த கருத்தும் வெளியிடாமல் இருந்த ரஜினி, இன்று முதல் முறையாக தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் மூலம் கமல் நேற்று பொங்கல் வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், இன்று ரஜினியும் தனது வாழ்த்தை பதிவிட்டுள்ளார். டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ள பொங்கல் வாழ்த்தில், என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு என் மனமார்ந்த பொங்கல் நல் வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டின் முன் ரசிகர்களை சந்தித்த ரஜினி, பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த ஆண்டு பொங்கல் திருநாள் அனைவருக்கும் வளமானதாகவும், செழிப்பானதாகவும் இருக்க இறைவனை வேண்டுகிறேன். அனைவரும் செழிப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க வாழ்த்து என்றார்.