பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் தனது அரசியல் வருகை குறித்து அறிவித்தார். தனது அரசியல் அறிவிப்பிற்கு பிறகு எந்த கருத்தும் வெளியிடாமல் இருந்த ரஜினி, இன்று முதல் முறையாக தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் மூலம் கமல் நேற்று பொங்கல் வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், இன்று ரஜினியும் தனது வாழ்த்தை பதிவிட்டுள்ளார். டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ள பொங்கல் வாழ்த்தில், என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு என் மனமார்ந்த பொங்கல் நல் வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டின் முன் ரசிகர்களை சந்தித்த ரஜினி, பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த ஆண்டு பொங்கல் திருநாள் அனைவருக்கும் வளமானதாகவும், செழிப்பானதாகவும் இருக்க இறைவனை வேண்டுகிறேன். அனைவரும் செழிப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க வாழ்த்து என்றார்.