இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் தனது அரசியல் வருகை குறித்து அறிவித்தார். தனது அரசியல் அறிவிப்பிற்கு பிறகு எந்த கருத்தும் வெளியிடாமல் இருந்த ரஜினி, இன்று முதல் முறையாக தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் மூலம் கமல் நேற்று பொங்கல் வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், இன்று ரஜினியும் தனது வாழ்த்தை பதிவிட்டுள்ளார். டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ள பொங்கல் வாழ்த்தில், என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு என் மனமார்ந்த பொங்கல் நல் வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டின் முன் ரசிகர்களை சந்தித்த ரஜினி, பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த ஆண்டு பொங்கல் திருநாள் அனைவருக்கும் வளமானதாகவும், செழிப்பானதாகவும் இருக்க இறைவனை வேண்டுகிறேன். அனைவரும் செழிப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க வாழ்த்து என்றார்.