'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப்பிறகு பிரபலமாகியிருப்பவர் ஓவியா. பிக்பாஸ் சமயத்தின்போது ஓவியாவுக்கு பல ரசிகர்கள் ஆதரவளித்தனர். அவர்களில் நடிகர் சிம்புவும் ஒருவர். இந்நிலையில், 2018 புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சிம்பு இசையமைத்து எழுதி பாடிய மரண மட்டை ஆல்பத்தில் ஓவியாவும் அவருடன் இணைந்து பாடியிருந்தார். அதையடுத்து, அவர்கள் திருமண கோலத்தில் இருப்பது போன்ற கிராபிக்ஸ் போட்டோக்கள இணைய தளத்தில் வைரலானது.
அதையடுத்து பொங்கல் ஸ்பெசல் நிகழ்ச்சிக்காக ஒரு தொலைக்காட்சியில் ஓவியா தோன்றியபோது, சிம்பு - ஓவியா திருமண போட்டோ குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அப்போது, அது யாரோ பரப்பி விட்ட வதந்தி என்று பதில் கூறிக்கொண்டிருந்தார் ஓவியா. அந்த சமயத்தில் அந்த நிகழ்ச்சிக்கு கால் செய்த சிம்பு, எனக்கும், ஓவியாவுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து, திருமணமே முடிந்து விட்டது என்று சிரித்தபடி கிண்டலாக பதில் கொடுத்தார். ஆக, ஒருவழியாக சிம்பு-ஓவியா திருமண வதந்திக்கு தொலைக்காட்சி மூலம் முற்றுப்புள்ளி வைத்து விட்டார் சிம்பு.