'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கதையின் நாயகியாக நடிக்கத் தொடங்கிய பிறகு பிரபல ஹீரோக்களுடன் நடிக்கும் படங்களுக்கு புதிய நிபந்தனைகளை விதித்து வருகிறார் நயன்தாரா. அதாவது, முன்பு நடித்தது போன்று ஹீரோக்களுடன் அதிகப்படியான நெருக்கமாக நடிக்க மாட்டேன். அளவுக்கதிகமான ஆடைக்குறைப்பு செய்ய மாட்டேன் என்று டைரக்டர்கள் தன்னிடம் கதை சொல்லும்போதே தனது சார்பில் கண்டிசன் போட்டு விடுகிறார்.
அந்த வகையில், தெலுங்கில் தற்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள ஜெய்சிம்ஹா படம் திரைக்கு வந்துள்ளது. இந்த படத்தில் இதற்கு முன்பு தெலுங்கில் நடித்த படங்களைப்போன்று பாடல் காட்சிகளில் கிளாமர் மட்டுமின்றி, நெருக்கம் காட்டாமலும் நடித்திருக்கிறார் நயன்தாரா.
அதோடு, இந்த ஜெய் சிம்ஹா படத்தில் வழக்கமான கதாநாயகியாக நடிக்க நயன்தாரா ஆர்வம் இல்லாமல் இருந்தபோதும், கே.எஸ்.ரவிக்குமார் கேட்டுக் கொண்டதால் இப்படத்தில் கமிட்டானாராம் நயன்தாரா.