ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கதையின் நாயகியாக நடிக்கத் தொடங்கிய பிறகு பிரபல ஹீரோக்களுடன் நடிக்கும் படங்களுக்கு புதிய நிபந்தனைகளை விதித்து வருகிறார் நயன்தாரா. அதாவது, முன்பு நடித்தது போன்று ஹீரோக்களுடன் அதிகப்படியான நெருக்கமாக நடிக்க மாட்டேன். அளவுக்கதிகமான ஆடைக்குறைப்பு செய்ய மாட்டேன் என்று டைரக்டர்கள் தன்னிடம் கதை சொல்லும்போதே தனது சார்பில் கண்டிசன் போட்டு விடுகிறார்.
அந்த வகையில், தெலுங்கில் தற்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள ஜெய்சிம்ஹா படம் திரைக்கு வந்துள்ளது. இந்த படத்தில் இதற்கு முன்பு தெலுங்கில் நடித்த படங்களைப்போன்று பாடல் காட்சிகளில் கிளாமர் மட்டுமின்றி, நெருக்கம் காட்டாமலும் நடித்திருக்கிறார் நயன்தாரா.
அதோடு, இந்த ஜெய் சிம்ஹா படத்தில் வழக்கமான கதாநாயகியாக நடிக்க நயன்தாரா ஆர்வம் இல்லாமல் இருந்தபோதும், கே.எஸ்.ரவிக்குமார் கேட்டுக் கொண்டதால் இப்படத்தில் கமிட்டானாராம் நயன்தாரா.