வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
பிரபல மலையாள இயக்குனர் எம்.ஏ.நிஷாந்த் இயக்கி வரும் தமிழ் படம் "கேணி". தமிழ் மற்றும் மலையாளத்தில் தயாராகும் இந்தப் படத்தில் ஜெயப்பிரதா, ரேவதி, ரேகா, அர்ச்சனா, அனுஹாசன் என 5 மாஜி ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர பார்த்திபன், நாசர், எம்.எஸ்.பாஸ்கர், தலைவாசல் விஜய் உள்பட பலர் நடிக்கிறார்கள். எம்.ஜெயச்சந்திரன் இசை அமைக்கிறார், படம் பற்றி இயக்குனர் எம்.ஏ.நிஷாந்த் கூறியதாவது:
மம்முட்டி, பிருத்விராஜ், சுரேஷ் கோபி நடித்துள்ள 7 மலையாளப் படங்களை இயக்கி உள்ளேன். கேணி தமிழ், மலையாள மொழிகளில் தயாராகி வருகிறது. நான் இயக்கும் படங்கள் சமூக பிரச்சினைகளை மையமாக கொண்டு இருக்கும். இந்தப் படமும் அப்படித்தான். காற்றைப்போல நீரும் மக்களுக்கு பொதுவானது. அதை உரிமை கொண்டாடவும், அணைகள் கட்டி தடுக்கவும் யாருக்கும் உரிமை இல்லை. இதை துணிச்சலாக படத்தில் பேசியிருக்கிறேன். தமிழ்நாடு, கேரளா மாநில எல்லை கிராமங்கள் தான் கதை களம். என்றார் நிஷாந்த்.