துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் |
பிரபல மலையாள இயக்குனர் எம்.ஏ.நிஷாந்த் இயக்கி வரும் தமிழ் படம் "கேணி". தமிழ் மற்றும் மலையாளத்தில் தயாராகும் இந்தப் படத்தில் ஜெயப்பிரதா, ரேவதி, ரேகா, அர்ச்சனா, அனுஹாசன் என 5 மாஜி ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர பார்த்திபன், நாசர், எம்.எஸ்.பாஸ்கர், தலைவாசல் விஜய் உள்பட பலர் நடிக்கிறார்கள். எம்.ஜெயச்சந்திரன் இசை அமைக்கிறார், படம் பற்றி இயக்குனர் எம்.ஏ.நிஷாந்த் கூறியதாவது:
மம்முட்டி, பிருத்விராஜ், சுரேஷ் கோபி நடித்துள்ள 7 மலையாளப் படங்களை இயக்கி உள்ளேன். கேணி தமிழ், மலையாள மொழிகளில் தயாராகி வருகிறது. நான் இயக்கும் படங்கள் சமூக பிரச்சினைகளை மையமாக கொண்டு இருக்கும். இந்தப் படமும் அப்படித்தான். காற்றைப்போல நீரும் மக்களுக்கு பொதுவானது. அதை உரிமை கொண்டாடவும், அணைகள் கட்டி தடுக்கவும் யாருக்கும் உரிமை இல்லை. இதை துணிச்சலாக படத்தில் பேசியிருக்கிறேன். தமிழ்நாடு, கேரளா மாநில எல்லை கிராமங்கள் தான் கதை களம். என்றார் நிஷாந்த்.