குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் |
பிரபல மலையாள இயக்குனர் எம்.ஏ.நிஷாந்த் இயக்கி வரும் தமிழ் படம் "கேணி". தமிழ் மற்றும் மலையாளத்தில் தயாராகும் இந்தப் படத்தில் ஜெயப்பிரதா, ரேவதி, ரேகா, அர்ச்சனா, அனுஹாசன் என 5 மாஜி ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர பார்த்திபன், நாசர், எம்.எஸ்.பாஸ்கர், தலைவாசல் விஜய் உள்பட பலர் நடிக்கிறார்கள். எம்.ஜெயச்சந்திரன் இசை அமைக்கிறார், படம் பற்றி இயக்குனர் எம்.ஏ.நிஷாந்த் கூறியதாவது:
மம்முட்டி, பிருத்விராஜ், சுரேஷ் கோபி நடித்துள்ள 7 மலையாளப் படங்களை இயக்கி உள்ளேன். கேணி தமிழ், மலையாள மொழிகளில் தயாராகி வருகிறது. நான் இயக்கும் படங்கள் சமூக பிரச்சினைகளை மையமாக கொண்டு இருக்கும். இந்தப் படமும் அப்படித்தான். காற்றைப்போல நீரும் மக்களுக்கு பொதுவானது. அதை உரிமை கொண்டாடவும், அணைகள் கட்டி தடுக்கவும் யாருக்கும் உரிமை இல்லை. இதை துணிச்சலாக படத்தில் பேசியிருக்கிறேன். தமிழ்நாடு, கேரளா மாநில எல்லை கிராமங்கள் தான் கதை களம். என்றார் நிஷாந்த்.