மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
புதுமுகங்கள் இணைந்து உருவாக்கியிருக்கும் படம் பாஞ்சாலி. மைக்ரோ மீடியா சார்பில் ஏ.பி.சந்திரபோஸ் தயாரித்து இயக்கி உள்ளார். விக்கிவரன், ஜெனி ஜேம்ஸ், செல்லத்துரை, முகிலன் என நடித்திருப்பவர்கள் அனைவரும் புதுமுகங்கள். விஜயபாண்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இலங்கை இறுதி போரில் குண்டடிபட்ட ஒரு தலைவருக்கு சிகிச்கை அளிக்க மக்கள் போராடுவது போன்று அந்த டிரைலர் இருந்தது. இதனால் படம் இலங்கை இறுதி போர் பற்றிய படம் என்று கருதி யாரும் வாங்க முன்வரவில்லை. இந்த நிலையில் படம் இலங்கை இறுதி போர் பற்றியதல்ல என்று விளக்கம் அளித்திருக்கிறார் இயக்குனர் ஏ.பி.சந்திரபோஸ். இதுகுறித்து அவர் கூறியதாவது:
போரில் குண்டடிப்பட்ட ஒரு தலைவனை பாதுகாக்க வேண்டும். பல முறை முயற்சித்தும் அது முடியவில்லை. அவரைக் காப்பாற்ற பாஞ்சாலி என்ற ஒரு பெண்ணால்தான் முடியும். அந்த பெண் அவரை எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை. இது இலங்கை போர் பற்றிய கதை அல்ல. லெமுரியா என்ற ஒரு கற்பனை நாட்டில் நடக்கிற கதை. எல்லா நோய்களையும் குணப்படுத்தும் ஒரு அரிய மருந்தை கண்டுபிடித்து வைத்திருந்த தமிழ் முன்னோர்களின் கதை என்றார்.