சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
புதுமுகங்கள் இணைந்து உருவாக்கியிருக்கும் படம் பாஞ்சாலி. மைக்ரோ மீடியா சார்பில் ஏ.பி.சந்திரபோஸ் தயாரித்து இயக்கி உள்ளார். விக்கிவரன், ஜெனி ஜேம்ஸ், செல்லத்துரை, முகிலன் என நடித்திருப்பவர்கள் அனைவரும் புதுமுகங்கள். விஜயபாண்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இலங்கை இறுதி போரில் குண்டடிபட்ட ஒரு தலைவருக்கு சிகிச்கை அளிக்க மக்கள் போராடுவது போன்று அந்த டிரைலர் இருந்தது. இதனால் படம் இலங்கை இறுதி போர் பற்றிய படம் என்று கருதி யாரும் வாங்க முன்வரவில்லை. இந்த நிலையில் படம் இலங்கை இறுதி போர் பற்றியதல்ல என்று விளக்கம் அளித்திருக்கிறார் இயக்குனர் ஏ.பி.சந்திரபோஸ். இதுகுறித்து அவர் கூறியதாவது:
போரில் குண்டடிப்பட்ட ஒரு தலைவனை பாதுகாக்க வேண்டும். பல முறை முயற்சித்தும் அது முடியவில்லை. அவரைக் காப்பாற்ற பாஞ்சாலி என்ற ஒரு பெண்ணால்தான் முடியும். அந்த பெண் அவரை எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை. இது இலங்கை போர் பற்றிய கதை அல்ல. லெமுரியா என்ற ஒரு கற்பனை நாட்டில் நடக்கிற கதை. எல்லா நோய்களையும் குணப்படுத்தும் ஒரு அரிய மருந்தை கண்டுபிடித்து வைத்திருந்த தமிழ் முன்னோர்களின் கதை என்றார்.