டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பாலிவுட் மேட் பார் ஈச் அதர் ஜோடியாக வர்ணிக்கப்படுகிறவர்கள் ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனேவும். இருவரும் இணைந்து நடித்துள்ள படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றிருக்கிறது. கடைசியாக இணைந்து நடித்த பாஜிராவ் மஸ்தானி பெரிய வெற்றி பெற்றது. அடுத்து நடித்துள்ள பத்மவாத் படம் வருகிற 26ந் தேதி வெளிவர இருக்கிறது. இருவரும் தீவிரமாக காதலித்து வருகிறார்கள். இதுகுறித்த செய்திகள் வெளியானபோது அதை இருவரும் மறுக்கவும் இல்லை. ஒப்புக் கொள்ளவும் இல்லை.
இந்த நிலையில் இருவரது திருமணத்துக்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. பத்மாவதி படப் பிரச்னையால் மனம் தளர்ந்து போயிருந்த தீபிகாவுக்கு ரன்வீர் சிங் தான் ஆறுதலும், தேறுதலும் அளித்துள்ளார். இதனால் காதல் இன்னும் நெருக்கமாகியிருக்கிறதாம். அண்மையில் தீபிகா படுகோனேவின் 32வது பிறந்த நாளை மாலத்தீவில் தன் செலவில் கொண்டாடினார் ரன்வீர் சிங். அப்போது அவர் தீபிகாவிற்கு விலை உயர்ந்த மோதிரம் பரிசளித்ததாக செய்திகள் வெளியானது. மாலத்தீவில் நடந்தது பிறந்தநாள் விழா மட்டுமல்ல திருமண நிச்சயதார்த்த விழாவும் தான் என்று இப்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுமட்டுமல்லாது தன்வீர் சிங்கும், தீபிகாவும் இணைந்து கோவா மற்றும் லண்டனில் கோடிக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொகு வீட்டை வாங்கி உள்ளனர். திருமணத்திற்கு பிறகு இந்த வீட்டில் தான் செட்டிலாக உள்ளனர். திருமண ஏற்பாடுகளை உறவினர்கள் தீவிரமாக செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.