ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடந்த நான்கு ஆண்டுகளில் ஒரே நடிகரை வைத்து ஐந்து படங்கள் இயக்கியுள்ளார் என்றால் அது இயக்குனர் ரஞ்சித் சங்கர் மற்றும் நடிகர் ஜெயசூர்யா ஆகிய இருவரின் கூட்டணி தான்.. மிகவும் உணர்வுப்பூர்வமான படங்களை இயக்குவதில் தேர்ந்தவரான இவர், கடந்த 15 மாதங்களில் மட்டுமே மூன்று படங்களை ரிலீஸ் செய்துள்ளார்.
ஜெயசூர்யாவின் ஆஸ்தான இயக்குனராக கருதப்படும் இவர் பெரும்பாலும் அவரை வைத்தே படங்கள் இயக்கி வருகிறார். சமீபத்தில் பிருத்விராஜை வைத்து படம் இயக்கப்போவதாக ரஞ்சித் சங்கர் அறிவித்து பத்து நாட்கள் தான் ஆனது.
இந்த நிலையில் தற்போது ஜெயசூர்யாவின் அடுத்த படமான 'ஞான் மேரிக்குட்டி' என்கிற படத்தை இயக்குவதாக நேற்று அறிவித்துள்ளார் ரஞ்சித் சங்கர். பிருத்விராஜ் இந்த வருடம் முழுதும் பிசியாக இருப்பதால், ஜெயசூர்யாவின் படத்தை முடித்த பின்னர், பிருத்விராஜ் படத்தை இயக்குவார் என்றே தெரிகிறது.